Saturday, September 13, 2008

முத்தமிழ் மணத்த மூன்றாம் ஆண்டு விழா.....,




மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தொடங்கியது .




முத்தமிழே மூச்சாகத் தொடங்கிய இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் , மக்கள் தமிழ் , இயற்றமிழ் என்று முப்பெரும்பகுதியாகவிழாகொண்டாடப்பட்டது .


பரவை முனியம்மாவின் பாட்டு , கலைமாமணி தஞ்சை விநாயகத்தின் காவடி ஆட்டம் , புதிய கோணங்கிகளின் அதிர்வேட்டு , பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலக்கல் கலைநிகழ்ச்சிகளோடு விழா களைகட்டியது .


இயக்குநர் அமீர் , இயக்குநர் சீமான் , இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் , சுப்பு ஆறுமுகம் , நாஞ்சில் நாடன் , பெரியார்தாசன் , எஸ் .பொ என பேராளர்கள் கருத்துரைக்க - மருத்துவர் இராமதாசு பேருரை நிகழ்த்த விழா இனிதே நடந்தது.




மாண்புமிகு நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முத்தமிழ் மணத்தது.

No comments: